வவுனியா நகர்ப்பகுதிக் கோட்டத்திற்கு உட்பட்ட 41 பாடசாலைகளையும் நாளை திறப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கொரோனாத் தொற்றாளர்கள் தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் சற்று முன்னர் வவுனியா கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் நேற்றும் 49 வர்தகர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா கொரோனா ஒழிப்புச் செயலணி இன்று கூடியபோதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), வவுனியா